எரிமலையாய் வெடிக்க தயாராகும் ஈரான் - இஸ்ரேல் போர்... உலகமே அஞ்சும் உச்சகட்ட பதற்றம்

x

எரிமலையாய் வெடிக்க தயாராகும் ஈரான் - இஸ்ரேல் போர்... உலகமே அஞ்சும் உச்சகட்ட பதற்றம்

ஈரானுடனான பதற்றம், காசா போர் நிறுத்தம் தடுப்பு ஆகியவற்றிற்கு இஸ்ரேலே காரணம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்தான்புல்லில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்... அப்போது காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவ துருக்கி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதை எர்டோகன் ஹனியேவிடம் தெரிவித்தார்... ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இதற்குக் காரணம் இஸ்ரேல் தான் என குற்றம் சாட்டினார்... மேலும், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படாததற்கும் இஸ்ரேல் தான் காரணம் என சாடிய ஹனியே, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்