ஈராக்கை உலுக்கிய வெடிகுண்டு தாக்குதல்...4 பேர் படுகொலை

x

ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... ஈரானிய புரட்சிகர காவல்படையானது தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று ஈரானிய எதிர்ப்பு பயங்கரவாதக் கூட்டங்கள் மற்றும் ஒற்றர்களின் தலைமையகத்தை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் குறி வைப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது... இத்தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 பேர் படுகாயம் அடைந்ததாக குர்திஸ்தான் பிராந்திய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால் இத்தாக்குதலில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி குழுவினர் யாரும் கொல்லப்படவில்லை எனவும் கூறப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்