பதிலடி கொடுத்த இந்தியா... திடீர் பல்டி அடித்த ட்ரூடோ | India | Canada

x

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியா தொடர்பு குறித்து விசாரிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய தூதரையும் வெளியேற்றுவதாக கனடா வெளியுறவுத்துறை தெரிவித்தது. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என்ற குற்றச்சாட்டு அபத்தமானது என எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, கனடா தூதரை வெளியேற்றியது. இந்தியா பதிலடியை கொடுத்த சூழலில், இந்தியாவை ஆத்திரமூட்டவோ, இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்கவோ விரும்பவில்லை என ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார். இந்திய அரசு இந்த விஷயத்தை தீவிரமாக கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதையே விரும்புவதாகவும், எல்லா விஷயங்களையும் தெளிவாக்க சரியான நடவடிக்கையை உறுதி செய்ய இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம் எனவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்