சூடுபிடிக்கும் இந்தியா - கனடா பிரச்சனை - வெளியான முக்கிய தகவல்

x

இந்தியாவில் உள்ள 40க்கும் மேலான அதிகாரிகளை திரும்ப பெற கனடாவிற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காலிஸ்தான் தீவிரவாதி நிஜார் கொலை விவகாரத்தில் கனடா- இந்தியா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம்சாட்டியநிலையில், இதனை திட்டவட்டமாக இந்தியா மறுத்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் உள்ள 40க்கும் மேலான அதிகாரிகளை வரும் 10ஆம் தேதிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு, கனடாவிற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.


Next Story

மேலும் செய்திகள்