இயல்பு நிலைக்கு திரும்பிய ஹரியானா - கலெக்டர் போட்ட உத்தரவு

x

இயல்பு நிலைக்கு திரும்பிய ஹரியானா - கலெக்டர் போட்ட உத்தரவு

ஹரியானா கலவரத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியதையடுத்து, குருகிராமில் 144 தடையை நீக்கி, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.நுஹ் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பேரணி நடத்தியபோது, கல்வீச்சுத் தாக்குதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை அருகிலுள்ள மகேந்திரகர், ஜஜ்ஜார், ரவேரி, குருகிராம், சோனிபட் போன்ற பகுதிகளுக்கும் பரவியது. இதில் ஏராளமான வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஊர்க்காவல் படையினர் இரண்டு பேர் உட்பட 6 பேர், கலவரத்தில் உயிரிழந்தனர். கலவரம் தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 12-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். கலவரம் பாதித்த பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஹரியானா கலவரத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியதையடுத்து, குருகிராமில் 144 தடையை நீக்கி, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்