அழித்தொழித்த இயற்கை.. 29 பேரை அடித்து இழுத்து கொன்று சோமாலியாவில் பயங்கரம்

x

சோமாலியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக வறட்சி வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக திடீரென கனமழை கொட்டத் தொடங்கியது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 29 பேர் உயிரிழந்தனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்