மொத்தமாக மாறிய சீனாவின் நிலை... அவசரமாக பறந்த ரெட் அலர்ட்

x

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது... மாகாண தலைநகரான ஜெங்ஜோவில் பனிப்புயலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பனியை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்... ஜெங்ஜோ மற்றும் அன்யாங்கில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. மாகாணம் முழுவதும் மொத்தம் 47 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 112 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை பனிப்புயல் தாக்கியது. அங்கும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்