குழந்தைகளை 15வது மாடியில் இருந்து தூக்கி வீசி படுகொலை செய்த தம்பதி.. கதறிய குழந்தைகள்

x

ஜாங் போவிற்கும் அவரது முதல் மனைவி சென் மெய்லினுக்கும் 2 மற்றும் 1 வயதில் ஒரு மகளும் மகனும் இருந்த நிலையில் 2020ல் இருவரும் விவாகரத்து பெற்றனர்... ஜாங் போ தனக்கு குழந்தைகள் இருப்பதை மறைத்து யே செங்சென் என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார்... குழந்தைகள் இருவரும் ஜாங் போவிடம் வளர்ந்து வந்த நிலையில், தாமதமாக குழந்தைகள் விவகாரம் குறித்து அறிந்து கொண்ட யே செங்சென், தங்கள் வாழ்க்கைக்கு குழந்தைகள் தடையாக இருக்கக் கூடாது என கூறி இருவரையும் கொலை செய்ய வற்புத்தியுள்ளார்... இதையடுத்து 2 குழந்தைகளும் அவர்கள் வசித்த குடியிருப்பில் 15வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையின் போது குழந்தைகள் விழுந்த சமயத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்ததாக ஜாங் போ தெரிவித்துள்ளார்... ஆனால் விசாரணையில் உண்மை தெரிய வந்த நிலையில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது... அதன்படி, ஊசி மூலம் மருந்து செலுத்தி ஜாங் போவிற்கும், டே செங்சென்னிற்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது உலகளவில் பேசு பொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்