உலகம் முழுவதும் வெடித்த தந்தி டிவி பேட்டி...மலேசிய EX பிரதமர் மீது குவியும் வழக்குகள்

x

தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது மலேசிய இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உலகம் முழுவதும் பேசுபொருளான நிலையில், தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று மகாதீர் நியாயப்படுத்தி உள்ளார்..நமது தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது பேசிய மகாதீர் முகமது, மலேசிய இந்தியர்கயளும், சீனர்களும் இன்னமும் தாங்கள் பிறந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற உணர்வுடனே இருப்பதாகவும் அவர்கள் மலேசியாவிற்கு உண்மையாக இல்லை எனவும் தெரிவித்த அவர், அவர்கள் மலேசியாவுக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்... பிரிவினையைத் தூண்டுவதாக மகாதீரின் இக்கருத்துக்கு மலேசிய பிரதமர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்... தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டி உலகம் முழுவதும் பேசுபொருளான நிலையில், அவர் மீது பல வழக்குகளும் தொடுக்கப்பட்டன... இது குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், இவ்விவகாரத்தை நீதிமன்றத்தில் தான் சந்தித்துக் கொள்வதாக மகாதீர் தெரிவித்துள்ளார்... விசாரணையின் போது தான் அளித்த பேட்டியை காவல்துறையினர் தனக்கு போட்டுக் காண்பித்ததாகவும், அதில் எந்தத் தவறுமே இல்லை என்றும் தெரிவித்த மகாதீர், சொந்தக் கருத்தைக் கூற தனக்கு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்...

Cases against Malaysia's EX Prime Minister


Next Story

மேலும் செய்திகள்