பாலத்திலிருந்து பறந்து விழுந்த பஸ் - உடல் கருகி 21 பேர் பரிதாப பலி

x

இத்தாலியில், மேம்பாலத்திலிருந்து சுற்றுலா பேருந்து கீழே விழுந்த விபத்தில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் வடக்குப் பகுதியில் வெனிஸ் நகரம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பேருந்து, வெனிஸ் பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மின்சார கம்பிகள் மீது பேருந்து விழுந்ததால், தீப்பிடித்து. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், 21 பேர் உயிரிழந்த நிலையில், 18 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்