திடீரென வெடிக்கும் இறந்த வீரர்கள் உடல்...கண்ணுக்கு தெரியாமல் ரஷ்யா வைத்த பொறி..தொட்டாலே சாவு..

x

போர்க்களத்தில் ரஷ்யா வைத்திருக்கும் கண்ணிவெடிகளால் தினந்தோறும் வீரர்களை பறிகொடுத்து வரும் உக்ரைன், இதனை சமாளிக்க புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்திருக்கிறது...

ரஷ்யா வைத்திருந்த கன்னிவெடி பொறிக்குள் சிக்கிய உக்ரைன் ராணுவ வீரர்கள் அனுபவித்த துயரம்தான், இந்தக் காட்சி...

உக்ரைனில் ஓராண்டுக்கு மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, போர்க்களத்தில் பல இடங்களில் கன்னி வெடிகளை மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ரஷ்ய படைகளை நோக்கி முன்னேறும் உக்ரைன் வீரர்கள் கன்னிவெடிகளை மிதித்து, உயிரையும், கால்களையும் இழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

புல்தரை, கதவுகள், பொம்மைகள், இறந்துபோன வீரர்கள் என கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடியை மறைத்து வைப்பது, உக்ரைன் வீரர்களுக்கு பெருத்த தலைவலியாக மாறி இருக்கிறது.

இதன் காரணமாக, செல்லும் பாதைகளில் கன்னிவெடி இருக்கிறதா? என்பதை சோதிக்கும் பணியில் ஈடுபட்டு, அனுதினமும் வீரர்களை பறிகொடுத்து வருகிறது, உக்ரைன் ராணுவம்...

இந்நிலையில், கன்னிவெடி தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள, புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்திருக்கிறது உக்ரைன்..

ஸ்பைடர் பூட் எனப்படும் இரும்பிலான ஷூ-தான் அந்தக் கண்டுபிடிப்பு.

இதனை அணிந்துகொண்டு செல்லும் உக்ரைன் வீரர்கள், கன்னிவெடிகளில் சிக்கி காயமடைவதும், உயிரிழப்பதும் கணிசமாக குறைந்திருப்பதாக உக்ரைன் ராணுவம் பெருமூச்சு விடுகிறது.

போர்க்களத்தில் கன்னிவெடி வைப்பது, பழைய டெக்னிக்காக இருந்தாலும், அதை சமாளிக்க உக்ரைன் எடுத்திருக்கும் நடவடிக்கை வியக்கவே வைக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்