இறுதி சடங்கிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

x

மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான பாங்குயி பகுதியில் எம்போகா என்னும் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மறுகரைக்கு சென்றால்தான், மற்ற பகுதிகளுக்கு செல்லமுடியும். மக்கள் இப்பகுதியை கடக்க படகு போக்குவரத்தை நம்பியுள்ளனர். இந்த நிலையில், இறுதி சடங்கு நிகழ்வு ஒன்றிற்காக, 300க்கும் மேற்பட்டவர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர், உள்ளுர் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், 58 பேர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டவர்கள் குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்