பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்.. தமிழக காவல்துறை வெளியிட்ட முக்கிய தகவல் | Bengaluru

x

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளிக்கும், காவலர் வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர்கள் அப்துல் மத்தீன் தாஹா மற்றும் முசாவிர் உசேன் ஷாசிப் ஆகிய இருவரும் தமிழ்நாடு காவலர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தனியார் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக காவல்துறை, அந்த இருவரும் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்