115 உயிர்களை காவு வாங்கிய காட்டுத்தீ..மொத்தமாய் போன வாழ்வாதாரம்...அமெரிக்காவில் பயங்கரம் | America

x

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மாவி தீவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயில் மாயமான நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது... ஆகஸ்ட் 8ம் தேதி பரவத் துவங்கிய இந்த காட்டுத்தீ விபத்துகளால் 115 பேர் பலியாகியுள்ளனர்... காட்டுத்தீ பரவலுக்கான காரணம் இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை... மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது... எரிந்து சாம்பலான 99 சதவீத பகுதிகளில் மீட்புக் குழுவினரால் தேடப்பட்ட நிலையிலும், தீ விபத்தின் போது காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்களின் நிலை என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்