போருக்குள் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா.. தயார் நிலையில் படைகள்..- ஆட்டத்தை தொடங்கிய பைடன்

x

இஸ்ரேலில் ஹமாஸ் நடத்தி வரும் தாக்குதலில் 11 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் பல அமெரிக்கர்கள் பணயக் கைதிகளாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், எத்தனை அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர் என்பது குறித்த தகவல்களை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கவில் இருந்து உளவுப்பிரிவு மற்றும் வல்லுநர்களை அனுப்பி, பணயக் கைதிகளின் நிலை அறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கவும் பைடன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்