ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் போர் - குழந்தைகளின் படிப்புக்கு உக்ரைன் செய்த சம்பவம்

x

உக்ரைனின் கார்கிவ் நகரில் பாதாளத்தில் நடைபெறும் முதல் நாள் பள்ளிக்கு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வருகை தந்தனர்...

உக்ரைன் - ரஷ்யா போர் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் 2வது பெரிய நகரமாக கார்கிவில் பள்ளி பாதாளத்தில் துவங்கப்பட்டுள்ளது... ஏவுகணை, வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, மெட்ரோ ரயில் நிலையத்தில் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன... இதுவரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடந்து வந்த நிலையில், தற்போது பாதாளத்தில் பள்ளி துவங்கப்பட்டுள்ளது... 60 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது... பள்ளியின் முதல் நாளை ஒட்டி பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் உற்சாகமாக வருகை தந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்