கடை வீதியில் திடீரென பற்றி எரிந்த தீ... சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்

x

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தலைநகர் நைரோபியில் சிட்டி அரங்கம் அருகே உள்ள கடை வீதியில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும், இந்த விபத்தால் உயிர்சேததங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பல மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலயில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தீயணைப்பு பணிகளை பார்வையிட பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்