5 வடகொரிய அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை - அமெரிக்கா அதிரடி

ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
x
ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தி இருந்தது. இந்த சோதனையை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். இந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அவர்கள் ஆற்றிய பங்குக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்