அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
x
அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்