வியட்நாமில் கொட்டித் தீர்க்கும் கனமழை - 18 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்

வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளால் இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வியட்நாமில் கொட்டித் தீர்க்கும் கனமழை - 18 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்
x
வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளால் இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக மத்திய வியட்நாம் பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த பாதிப்புகளால் இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்