கெனரி தீவு வந்தடைந்த புலம்பெயர்ந்தோர் - 38 பேரை மீட்ட கடலோரக் காவல் படையினர்
ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இருந்து 38 புலம்பெயர்ந்தோரை கடலோரக் காவல் படை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இருந்து 38 புலம்பெயர்ந்தோரை கடலோரக் காவல் படை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். க்ரான் கெனரி தீவில் இருந்து சுமார் 135 மைல்கள் அப்பால் உள்ள பகுதியில் இருந்து மொத்தம் 40 பேர் படகில் பயணித்து தீவுப்பகுதியை அடைந்த நிலையில், அவர்களில் பயணத்தின் போது 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்கள் பத்திரமாக அர்குன்குயின் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Next Story