சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை "விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை" - இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்சே உறுதி

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய அதிபர் கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை - இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்சே உறுதி
x
மட்டக்களப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்த முயற்சித்த விடுதலைப் புலி தலைவர்களின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட புகாரில் கைது செய்யப்பட்ட 16 பேரை, விடுதலை செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்