வௌவால்களின் மாதிரிகள் சேகரிப்பு - கம்போடிய ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஆய்வு

வட கம்போடியாவில் வவ்வால்களிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து, ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
வௌவால்களின் மாதிரிகள் சேகரிப்பு - கம்போடிய ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஆய்வு
x
10 ஆண்டுகளுக்கு முன்பு, இதே போன்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட அதே பகுதிக்கு ஆய்வாளர்கள் திரும்பியுள்ளனர். ஸ்டங் ட்ரெங் மாகாணத்தில்,குதிரை வாலி வவ்வால்களிடம் இருந்து கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட 2 மாதிரிகள் ஆய்வகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டன. கடந்த வருடம் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாதுகாக்கப்பட்ட மாதிரிகள் கொரோனா வைரசோடு ஒத்துப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 8 பேர் கொண்ட ஐபிசி ஆராய்ச்சி குழு, 1 வாரமாக வவ்வால்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து, தீவிர ஆய்வுகளை செய்து வருகிறது. இதே போன்ற ஆராய்ச்சி பிலிப்பைன்சிலும் நடந்து வருகிறது. இது குறித்து பேசிய ஆய்வாளர்கள், தங்களின் ஆராய்ச்சி, கொரோனா வைரஸ் குறித்த புரிதலை ஏற்படுத்த முயலும் என்று தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்