ஆப்கானில் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகள்: 3 பேர் உயிரிழப்பு-21 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானில் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகள்: 3 பேர் உயிரிழப்பு-21 பேர் காயம்
x
நேற்று காபூல் நகரில் பி.டி.13 பகுதியில்  சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 2 பேர் காயமடைந்தனர். அதேபோல், நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில், அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில்  3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயம் அடைந்துள்ளனர். தலிபான்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்