இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவம்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு
தீவிரவாதிகளால் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகளாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி விமானத்தை கடத்திய தீவிரவாதிகள் அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தை மோதி இடித்தனர்.
இந்த தாக்குதலில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நியூயார்க் வர்த்தக மையம் அமைந்துள்ள நினைவு தூன் அருகே அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாம,கிளின்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Next Story