சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர் - தேடும் பணிகளைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல்

சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர்களைத் தேடும் பணியில் இஸ்ரேல் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர் - தேடும் பணிகளைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல்
x
சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர்களைத் தேடும் பணியில் இஸ்ரேல் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக தப்பிச் சென்றனர். கைதிகளில் 5 பேர் இஸ்லாமிய ஜிஹாத் இராணுவக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அதில் ஒருவர் ஃபடா குழுவில் முன்னாள் கமாண்டராக இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடலாம் என்றும் இஸ்ரேல் சந்தேகம் கொள்கிறது. இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்