பாதசாரிகள்,மிதிவண்டி ஓட்டுவோருக்கான தினம் - இதர வாகனங்களுக்கு அனுமதி இல்லை

பொலிவியாவில் தேசிய பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கான தினத்தை முன்னிட்டு, சாலைகளில் கார் உள்ளிட்ட இதர வாகனங்கள் தடை செய்யப்பட்டன.
பாதசாரிகள்,மிதிவண்டி ஓட்டுவோருக்கான தினம் - இதர வாகனங்களுக்கு அனுமதி இல்லை
x
பொலிவியாவில் தேசிய பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கான தினத்தை முன்னிட்டு, சாலைகளில் கார் உள்ளிட்ட இதர வாகனங்கள் தடை செய்யப்பட்டன. லா பாஸ் நகரில் கார்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சாலைகள் விளையாட்டு மைதானங்களாய் மாறின. மக்கள் குதூகலமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்தனர். சமீபமாக சான்டா க்ரூஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகின. இந்நிலையில், மக்களிடையே சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொண்டாட்டத்தின் போது "பூமித்தாய் நீடூழி வாழ்க" என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்