தடுப்பூசி செலுத்திய பெண் உயிரிழப்பு- பைசர் தடுப்பூசியால் மாரடைப்பு என அறிவிப்பு

நியூசிலாந்தில் முதல் முறையாக பைசர் தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திய பெண் உயிரிழப்பு- பைசர் தடுப்பூசியால் மாரடைப்பு என அறிவிப்பு
x
நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பைசர், அஸ்ட்ராஜெனிகா, ஜான்சன், பயோஎன்டெக் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பைசர் தடுப்பூசி செலுத்தியதால் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் நியூசிலாந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. இதனிடையே வைரஸ் பரவல் மிகுந்த அக்லாண்ட் நகரில் கொரோனா ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்