பொலிவியாவில் பரவி வரும் காட்டுத் தீ: 55,000 ஹெக்டேர் நிலங்கள் சேதம்
பொலிவியாவில் காட்டுத் தீப்பரவலால் 55 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 8 வேவ்வேறு இடங்களில் 15 காட்டுத் தீ நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாராகுவே பகுதியின் எல்லையில் உள்ள பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதியான நெம்பி குவாசுவை நோக்கி தீ பரவிடுமோ என்று அதிகாரிகள் கவலையில் உள்ளனர். உலகின் மிகப்பெரிய வறண்ட காடுகளில் ஒன்றாக நெம்பி குவாசு கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story