துருக்கியில் பரவி வரும் காட்டுத் தீ - தீவிரப்படுத்தப்பட்ட தீயணைப்பு பணிகள்

துருக்கியில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயை, உக்ரைனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
துருக்கியில் பரவி வரும் காட்டுத் தீ - தீவிரப்படுத்தப்பட்ட தீயணைப்பு பணிகள்
x
பிரபல சுற்றுலாத்தளமான போர்டமில் பரவிய காட்டுத் தீ, பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இத்தீ விபத்தில் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 13 நாட்களில் ஏற்பட்ட கிட்டத்தட்ட 240 காட்டுத் தீ விபத்துகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்