கிரீஸில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - தீயை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தக் கோரி அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் ஏதென்ஸில் உள்ள நாடாளுமன்றம் முன்பாக திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தீயணைப்பு பணிகளில் அரசு மந்தமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், போர்த்தடவாளங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய அரசு, தீயணைப்பு உபகரணங்கள் வாங்குவதிலும் அக்கறை செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Next Story