தடுப்பூசி செலுத்தினால் பம்பர் பரிசு - கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்த நாடுகள்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க உலகின் பல நாடுகளும் பல்வேறு பரிசு திட்டங்களை அறிவித்து வருகின்றன.
தடுப்பூசி செலுத்தினால் பம்பர் பரிசு - கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்த நாடுகள்
x
கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க உலகின் பல நாடுகளும் பல்வேறு பரிசு திட்டங்களை அறிவித்து வருகின்றன. அது பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம். உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி வைரஸான கொரோனாவிடம் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக உள்ளது. தடுப்பூசி போடுவதை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க பல்வேறு நாடுகளும் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் ஒரு சிலர், குலுக்கல் முறையில்  தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வைரக் கற்கள் பதித்த ரோலெக்ஸ் கைக்கடிகாரங்கள், தங்க கட்டிகள் மற்றும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் பரிசாக அளிக்கப்படுகின்றன. இவர்களில் ஒரு சிலருக்கு டெஸ்லா கார் அல்லது 74 லட்சம் ரூபாய்  மதிப்புடைய பொருட்களும் வழங்கப்படுகின்றன


Next Story

மேலும் செய்திகள்