வெள்ளப்பெருக்கில் சிக்கிய மருத்துவமனை - பச்சிளங்குழந்தை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சீனாவின் ஜெங்ஜவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவமனை ஒன்றின், "குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்" இருந்து பச்சிளங்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கில் சிக்கிய மருத்துவமனை - பச்சிளங்குழந்தை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
x
சீனாவின் ஜெங்ஜவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவமனை ஒன்றின், "குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்" இருந்து பச்சிளங்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஜெங்ஜவ் பகுதி முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில், ஆயிரக்கணக்கான நோயாளிகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிறவி இதய நோயால்  அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்று, கடைசியாக ஹெலிகாப்டர் மூலம் வெள்ள நீர் புகுந்த மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்