ஐரோப்பிய நாடுகளில் கனமழை வெள்ளப்பெருக்கு - ஜெர்மனி, பெல்ஜியத்தில் கடும் பாதிப்பு

ஜெர்மனியில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்து உள்ளது
ஐரோப்பிய நாடுகளில் கனமழை வெள்ளப்பெருக்கு - ஜெர்மனி, பெல்ஜியத்தில் கடும் பாதிப்பு
x
ஐரோப்பாவில் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடுமையாக பாதிப்புக்கு உள்ளான ஜெர்மனியின் மேற்கு மாகாணத்தில் ஆயிரக் கணக்காண மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் மழை வெள்ளம் தொடர்புடைய சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல் பெல்ஜியத்தில் வெள்ளத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்