நெருங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா...

ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெருங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா...
x
வருகிற 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில், போட்டி ஏற்பாட்டாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்றும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ மியூட்டோ கூறி உள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், ஒலிம்பிக் கிராமத்திலே தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது, போட்டி ஏற்பாட்டாளர்களை சற்று கலக்கமடையச் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்