காணாமல் போன சிறுவனைக் கண்டறிந்த செய்தியாளர் - ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

இத்தாலியில் காணாமல் போன சிறுவனை, தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவர் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன சிறுவனைக் கண்டறிந்த செய்தியாளர் - ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
x
இத்தாலியில் காணாமல் போன சிறுவனை, தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவர் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை சிறுவன் காணாமல் போன நிலையில், அதைக் குறித்து செய்தியாளர் ஒருவர் தகவல் சேகரிகரிக்க சென்றுள்ளார். இந்நிலையில், பலாசுலோ சுல்செனியோ பகுதியிலிருந்த குறுகிய பள்ளத்தாக்கு ஒன்றிலிருந்து சிறுவன் ஒருவனின் அழுகுரல் கேட்டுள்ளது. தொடர்ந்து சென்ற செய்தியாளர், சாதூர்யமாக சிறுவனைக் கண்டறிந்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனை பத்திரமாக மீட்டுச் சென்றனர். இது குறித்த புகைப்படம் ஒன்றை மீட்புக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்