"மனித உரிமைகளுக்கு எப்படி மதிப்பளிப்பது?": "பள்ளிக்கு சென்று கற்றுக் கொள்ளவும்" - தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
மனித உரிமைகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பதை கோட்டபய ராஜபக்ச முதலில் பள்ளிக்கு சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்துள்ளது.
மனித உரிமைகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பதை கோட்டபய ராஜபக்ச முதலில் பள்ளிக்கு சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இலங்கை அரசு மனித உரிமைகள் விவகாரத்தை தொடர்ந்து உதாசீனம் செய்தால் பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடையும் என்றார். மனித உரிமைகளை பாதுகாக்காமல் இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்றும் கூறினார்.
Next Story