ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் - இழுத்து செல்லப்படும் சடலங்கள்

ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் நகரங்கள் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் - இழுத்து செல்லப்படும் சடலங்கள்
x
ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் நகரங்கள் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒரே நாளில் 38 பேர் கண்மூடித்தனமாக சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாங்கூன் உட்பட பல நகரங்களில் வீதிகள் ரத்த வெள்ளத்தில் காட்சியளிக்கின்றன. இவற்றை வெளி கொண்டு வர முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடக்கும் சடலங்களை ராணுவத்தினர் இழுத்து செல்லும் காட்சியை மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளன. இரக்கமற்ற முறையில் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினரை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பாவி மக்களை கொன்று குவிப்பதையும், சிறையில் அடைப்பதையும் மியான்மர் ராணுவம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஐநாவின் மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்