மியான்மரில் பேஸ்புக் சேவை முடக்கம் - ராணுவம் அதிரடி அறிவிப்பு
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பேஸ்புக் சேவை முடக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பேஸ்புக் சேவை முடக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. அங்கு போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க வரும் 7 தேதி வரை பேஸ்புக் பயன்பாட்டுக்கு மியான்மர் ராணுவம் தடை விதித்துள்ளது. அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ் புக் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சேவைகளை மீண்டும் தொடர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story