மனைவி... மறுபிறவி...நெகிழ்ச்சி... இறந்த மனைவியுடன் நடனமாடிய கணவர்

தென் கொரியாவில் இறந்துபோன மனைவியுடன் உற்சாகமாக நடனமாடியுள்ளார் கணவர். எப்படி நிகழ்ந்தது இந்த அற்புதம்.
மனைவி... மறுபிறவி...நெகிழ்ச்சி... இறந்த மனைவியுடன் நடனமாடிய கணவர்
x
தென் கொரியாவில் இறந்துபோன மனைவியுடன் உற்சாகமாக நடனமாடியுள்ளார் கணவர். எப்படி நிகழ்ந்தது இந்த அற்புதம். விவரிக்கிறது இந்த காட்சி தொகுப்பு.

கற்பனையில் வாழ நினைப்பதை, நிஜ உலகில் நிகழ்த்தி காட்டும் ஒரு அற்புதம் இது...

சென்ற ஆண்டு தென்கொரியாவில், இறந்து சில மாதங்கள் ஆன குழந்தையை, நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் கண்ட நெகிழ்ச்சியில், ஒரு தாய் கண்ணீருடன் உரையாடிய காட்சிகள் உலக மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. 

இந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டியது  VIRTUAL REALITY-தான். 

இந்த தாயை மகிழ வைத்த அதே குழு தான், தற்போது மீண்டும் ஒரு நம்பமுடியாத அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்தி காட்டி இருக்கிறது.

Meeting You என்ற பெயரில், இறந்த மகளிடம் தாய் உரையாடியதை உலகிற்கு கூறியவர்கள், இந்த முறை மனைவியை இழந்து வாடிய கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்ச்சியில் திகைக்க வைத்திருக்கின்றனர். 

நடை, உடை பாவனைகளை கணினியில் பதிவேற்றி, 6 மாத உழைப்பிற்கு பிறகு, அந்த பெண்ணை நிஜ உலகின் அதிசய படைப்பாக கணவருக்கு அறிமுகப்படுத்தியது அந்த குழு.

எல்லாம் ரெடி, இதுதான் நேரம் என அறிந்து, கணவரிடம் VIRTUAL REALITY-க்கான கவசத்தை கொடுத்து, அந்த அழகிய தருணத்தை அனுபவிக்குமாறு கூறினர். மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீருடன் பாசம் பரிமாற, பின்னர் அவருடன் இணைந்து காதலுடன் நடனமாடிய காட்சிகள், பார்ப்போரை நெகிழ வைத்தது.

மனைவியை பார்த்து கணவர் மகிழ்ச்சியில் மூழ்க, தந்தையின் செயல்பாடுகளை வியப்புடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர் இவர்களது குழந்தைகள்.

மறைந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்பு, எங்களுக்கும் கிடைக்காதா என காண்போரை ஏங்க வைத்திருக்கிறது, இந்த தென்கொரிய குழு.

Next Story

மேலும் செய்திகள்