"மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் பொங்கட்டும்" - பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து -

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தைப் பொங்கல் திருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் பொங்கட்டும் - பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து -
x
வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த நன்னாளில் நீங்கள்  இனிப்பான பொங்கலை உண்டு இயற்கைக்கு நன்றி செலுத்துவது போல, கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உங்களுடைய பணிகளுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த நெருக்கடியான காலத்தில் வெளியே சென்று வழக்கமான பொங்கலை கொண்டாடதன் மூலம் நீங்கள் இன்று செய்யும் தியாகம்
விலைமதிப்பில்லாதவையாகும் எனக் கூறியுள்ளார். மேலும், கொரோனாவில் இருந்து மீள்வோம், புதிதாக வாழ தொடங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் வாழ் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டு இருக்கும் போரிஸ் ஜான்சன், என்றும் உங்கள் பொங்கல் பானை மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் பொங்கட்டும் எனக் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்