பள்ளிகளை மூட போர்ச்சுகல் அரசு முடிவு

ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பள்ளிகளை மூட போர்ச்சுகல் அரசு முடிவு
x
ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, விடுமுறை நாட்களில் உள்நாட்டுப் போக்குவரத்தை தடை செய்ய போர்ச்சுகல் அரசாங்கம் முடிவெடுத்து உள்ளது. இதேபோல், பள்ளிகளை திங்கட்கிழமைகளில் மூட உள்ளதாகவும் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா தெரிவித்து உள்ளார். போர்ச்சுகலில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 3 ஆயிரத்து 800 பேர் வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்