நாடுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் - ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா பேச்சு

ஆசிய - பசிபிக் பகுதியில் சுதந்திர வர்த்தகத்தை முன்னெடுக்க, பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு நாடுகளிடையே ஒரு ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த ஜப்பான் முயற்சி செய்யும் என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் - ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா பேச்சு
x
ஆசிய - பசிபிக் பகுதியில் சுதந்திர வர்த்தகத்தை முன்னெடுக்க, பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு நாடுகளிடையே ஒரு ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த ஜப்பான் முயற்சி செய்யும் என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார். ஆசிய - பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பின் தலைமை செயல் அதிகாரிகள் மாநாட்டில் காணொலி மூலம் பேசிய அவர், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, நாடுகளிடையே பயணிகள் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும்  பிராந்திய பொருளாதார கூட்டமைப்பை  விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். இந்த பிராந்திய கூட்டமைப்பில்  கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்தியா சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்