கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம் - தற்காலிகமாக நிறுத்தி வைத்த சீரம் இன்ஸ்டிட்யூட்

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை தற்காலிகமாக சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம் - தற்காலிகமாக நிறுத்தி வைத்த சீரம் இன்ஸ்டிட்யூட்
x
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனைகளில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மத்தியில் தான் தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறையின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை சீரம் இன்ஸ்டிட்யூட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசியின் சோதனையில் கண்டறிய முடியாத பின்விளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்டது. இதனையடுத்து இத்தடுப்பூசியின் சோதனை உலகளாவிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்