மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை - பீதியில் மக்கள்

மெக்ஸிகோவில் 7.4 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை - பீதியில் மக்கள்
x
மெக்ஸிகோவில் 7.4 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்ஸிகோவில் நேற்றிரவு 9 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 4 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்தன. பீதியில் உறைந்த மக்கள் சாலைகளில்  தஞ்சமடைந்தனர். மெக்ஸிகோவின் ஒக்ஷாகா நகரின் சசன் மிகுல், டெல் பெட்ரோ பகுதியிலிருந்து 31 கிலோ மீட்டர்  தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மெக்ஸிகோவில் கடந்த 2017ம் ஆண்டு, ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியிருந்தது. அப்போது 355 பேர் பலியாகினர்.

Next Story

மேலும் செய்திகள்