போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாட அரசு அனுமதி

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாட அரசு அனுமதி
x
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக யானைகளை கொண்டுள்ள போட்ஸ்வானாவில், யானைகள் தாக்குவதால் மலைவாழ் மக்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் விவசாய நிலங்கள் யானைகளால் சேதப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் யானைகளை வேட்டையாட விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அதிபர் நீக்கியுள்ளார். யானைகளை வேட்டையாட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் நூற்றுக்கணக்கான யானைகளை கொல்ல அந்நாடு திட்டமிட்டுள்ளது.  
 


Next Story

மேலும் செய்திகள்