சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பண விவரம் : இன்று முதல் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை அமல்
சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அளிக்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
2018-ம் ஆண்டில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள், கணக்கு முடிக்கப்பட்ட விவரங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இது கருப்பு பணம் மற்றும் 'சுவிஸ் வங்கி ரகசியம்' ஆகியவற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் அந்த வாரியம் குறிப்பிட்டுள்ளது. சில குறிப்பிட்ட வழக்குகளில் கேட்கும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை துரிதமாக செயல்படுத்துவது குறித்து சுவிட்சர்லாந்து பிரதிநிதிகளுடன், மத்திய வருவாய் துறை மற்றும் நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story