"அரசியலில் ஈடுபட விருப்பமில்லை" - முன்னாள் ராணுவ தளபதி கருத்து

இலங்கை மக்களுக்கு தொடந்து சேவையாற்ற விரும்புவதாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறினார்.
அரசியலில் ஈடுபட விருப்பமில்லை - முன்னாள் ராணுவ தளபதி கருத்து
x
இலங்கை மக்களுக்கு தொடந்து சேவையாற்ற விரும்புவதாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறினார். கடந்த 16 ஆம் தேதியுடன் ஓய்வுபெற்ற அவர், கண்டியில், செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டுக்கு சேவையாற்ற அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட,  தான் விரும்பவில்லை என்று கூறினார். அதேநேரத்தில் வெளிநாட்டு தூதுவர் பதவியின் ஊடாககூட மக்களுக்கு சேவையாற்ற தயாராக இருப்பதாகவும், பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ராணுவ வீரர் என்ற அடிப்படையில் நாட்டுக்காக சேவையாற்ற எப்போதுமே தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்