இலங்கையில் போதை பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் - அதிபர் சிறிசேன
இலங்கையில் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு முன்வராதவர்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பதாக அதிபர் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு முன்வராதவர்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பதாக அதிபர் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். குருணாகலில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான விழாவில் பங்கேற்ற அவர், மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர் இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதாக
கூறினார். இலங்கையில் போதை பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை எந்த தடைகள் வந்தாலும் தொடரும் என்றும் அதிபர் சிறிசேன தெரிவித்தார்.
Next Story