"மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்" : இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகார சபை சுற்றறிக்கை
இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் வரும் திங்கள் கிழமை குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளது.கொழும்பு நகரில் உள்ள நாவலை , வெள்ள வத்தை, பஞ்சிகா வத்தை, கொழும்பு கோட்டை, ரயில் நிலையம் ஆகிய இடங்களை தீவிரவாதிகள் குறி வைத்தள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கொழும்பு நகரமெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story