"மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்" : இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகார சபை சுற்றறிக்கை

இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் : இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகார சபை சுற்றறிக்கை
x
இது தொடர்பாக இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் வரும் திங்கள் கிழமை குண்டு வெடிப்புகளை  நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளது.கொழும்பு நகரில் உள்ள நாவலை , வெள்ள வத்தை, பஞ்சிகா வத்தை,  கொழும்பு கோட்டை,  ரயில் நிலையம் ஆகிய இடங்களை தீவிரவாதிகள் குறி வைத்தள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கொழும்பு நகரமெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்